47.
தீவினை செய்தோர்
வாய் இகழ்வு
பேசி மிகு வாழ்வு இழந்தோன், சிவனை
வைது தன் தலை போயினோன்,
மற்றொருவர் தாரத்தில் இச்சை வைத்து உடலெலாம்
மாறாத வடுவு ஆயினோன்,
தாயத்தினோர்க்கு உள்ள பங்கைக் கொடாமலே
சம்பத்து இகழ்ந்து மாய்ந்தோன்,
தக்க பெரியோர் தமை வணங்காது மதத்தினால்
தந்தி வடிவாய் அலைந்தோன்,
மாயனைச் சபை அதனில் நிந்தை செய்து ஒளிகொள் நவ
மணிமுடி துணிந்து மாய்ந்தோன்,
வரு நகுடனொடு தக்கன் குருடன்
மகன், வழுதி, சிசுபாலனாம்!
ஆயும் அறிவாளரொடு தேவர் பணி தாளனே!
அவனி புகழ் அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|