48. நன்நகர்

வாவி பல கூபமுடன் ஆறு அருகு சேர்வதாய்,
     மலை காத வழியில் உளதாய்
  வாழை கமுகொடு தெங்கு பயிராவதாய்ச், செந்நெல்
     வயல்கள் வாய்க்கால்கள் உளதாய்,
காவி கமலம் குவளை சேர் ஏரி உள்ளதாய்க்,
     கனவர்த் தகர்கள் மறைவலோர்
  காணரிய பல குடிகள் நிறைவு உள்ளதாய், நல்ல
     காவலன் இருக்கை உளதாய்த்,
தேவர் ஆலயம் ஆடல் பாடல் அணி மாளிகை
     சிறக்க உளதாய்ச் சற்சனர்
  சேரும் இடம் ஆகுமோர் ஊர் கிடைத்ததில் அதிக
     சீவனமுமே கிடைத்தால்
ஆவலொடு இருந்திடுவதே சொர்க்க வாசமென்று
     அறையலாம்! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை