49. தீநகர்

ஈன சாதிகள் குடி இருப்பதாய், முள்வேலி
     இல்இல்லினுக்கு உளதாய்,
  இணைமுலை திறந்து தம் தலை விரித்திடு மாதர்
     எங்கும் நடமாட்டம் உளதாய்க்,
கானமொடு பக்கமாய் மலை ஓரமாய் முறைக்
     காய்ச்சல் தப்பாத இடமாய்,
  கள்ளர் பயமாய், நெடிய கயிறு இட்டு இறைக்கின்ற
     கற்கேணி நீர் உண்பதாய்.
மானம் இல்லாக் கொடிய துர்ச்சனர் தமக்கு ஏற்ற
     மணியம் ஒன்றுண்டன் ஆனதாய்,
  மாநிலத்து ஓர் தலம் இருந்து அதனில் வெகுவாழ்வு
     வாழ்வதிலும், அருகரகிலே
ஆன நெடு நாள்கிடந்து அமிழ்தலே சுகமாகும்
     அமலனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை