5.
நல்லாசிரியர் இயல்
வேதாந்த சித்தாந்த வழி தெரிந்து ஆசார
விவரம் விஞ்ஞான பூர்ணம்
வித்யாம் விசேடம் சற்குணம் சத்தியம் சம்பன்னம்
வீரவைராக்யம் முக்யம்
சாதாரணப் பிரியம் யோகமார்க்க ஆதிக்யம்
சமாதி நிஷ்ட அனுபவராய்ச்,
சட்சமய நிலைமையும் பரமந்த்ர பரதந்த்ர
தருமமும் பரசமயமும்
நீதியின் உணர்ந்து, தத்துவ மார்க்கராய்ப், பிரம
நிலைகண்டு பாசம் இலராய்,
நித்திய ஆனந்த சைதன்யராய், ஆசை அறு
நெறியுளோர் சற்குரவராம்
ஆதாரமாய் உயிர்க்கு உயிராகி எவையுமாம்
அமல! உமது அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|