52. உண்மை உணர் குறி

சோதிடம் பொய்யாது மெய் என்பது அறிவரிய
     சூழ்கிரகணம் சாட்சி ஆம்!
  சொற் பெரிய வாகடம் நிசம் என்கை பேதி தரு
     தூய மாத்திரை சாட்சி ஆம்!
ஆதியில் செய்த தவம் உண்டு இல்லை என்பதற்கு
     ஆளடிமையே சாட்சி ஆம்!
  அரி தேவதேவன் என்பதை அறிய முதல்நூல்
     அரிச்சுவடியே சாட்சி ஆம்!
நாதனே மாதேவன் என்பதற்கோ ருத்ர
     நமகசமகம் சாட்சி ஆம்!
  நாயேனை ரட்சிப்பது உன்பாரம்! அரிஅயன்
     நாளும் அர்ச்சனை செய் சரணத்து
ஆதி நாயக மிக்க வேத நாயகனான
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை