53. பிறவிக்குணம் மாறாது

கலங்காத, சித்தமும், செல்வமும், ஞாலமும்,
     கல்வியும், கருணை விளைவும்,
  கருது அரிய வடிவமும் போகமும், தியாகமும்,
     கனரூபம் உள மங்கையும்,
அலங்காத வீரமும், பொறுமையும், தந்திரமும்,
     ஆண்மையும், அமுத மொழியும்,
  ஆன இச்செயல் எலாம் சனன வாசனையினால்
     ஆகிவரும் அன்றி, நிலமேல்
நலம் சேரும் ஒருவரைப் பார்த்தது பெறக்கருதின்
     நண்ணுமோ? ரஸ்தாளிதன்
  நற்சுவை தனக்குவர வேம்புதவமே நெடிது
     நாள்செயினும் வாராது காண்!
அலங்காரம் ஆக மலர்கொன்றை மாலிகை சூடும்
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே.

உரை