54. ஊழ்வலி

கடல் அளவு உரைத்திடுவர், அரிபிரமர் உருவமும்
     காணும் படிக்கு உரை செய்வர்,
  காசினியின் அளவு பிரமாணம் அது சொல்லுவார்
     காயத்தின் நிலைமை அறிவார்,
விடல் அரிய சீவநிலை காட்டுவார் மூச்சையும்
     விடாமல் தடுத்து அடக்கி
  மேன்மேலும் யோக சாதனை விளைப்பார், எட்டி
     விண் மீதினும் தாவுவார்,
தொடல் அரிய பிரம நிலை காட்டுவார், எண் வகைத்
     தொகையான சித்தி அறிவார்,
  சூழ்வினை வரும் பொழுது சிக்கி உழல்வார்! அது
     துடைக்க ஒரு நான்முகற்கும்
அடைவு அல எனத் தெரிந்து அளவு இல் பல நூல் சொல்லும்
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை