55.
உயர்வு இல்லாதவை
வேதியர்க்கு
அதிகமாம் சாதியும், கனக மக
மேருவுக்கு அதிக மலையும்,
வெண்திரை கொழித்து வரு கங்கா நதிக்கு அதிக
மேதினியில் ஓடு நதியும்
சோதி தரும் ஆதவற்கு அதிகமாம் காந்தியும்,
சூழ்கனற்கு அதிக சுசியும்
தூய தாய் தந்தைக்கு மேலான தெய்வமும்,
சுருதிக்கு உயர்ந்த கலையும்,
ஆதி வடமொழி தனக்கு அதிகமாம் மொழியும், நுகர்
அன்னதானம் தனிலும் ஓர்
அதிக தானமும் இல்லை என்று பல நூல் எலாம்
ஆராய்ந்த பேருரை செய்வார்!
ஆதவன் பிரமன் விண்ணவர் முனிவர் பரவ வரும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே.
|