56. வீணர்

வேட்டகம் சேர்வோரும் வீணரே! வீண் உரை
     விரும்புவோர் அவரின் வீணர்!
  விருந்து கண்டு இ்ல்லாள் தனக்கு அஞ்சி ஓடி மறை
     விரகு இலோர் அவரின் வீணர்!
நாட்டம் தரும் கல்வி இல்லோரும் வீணரே!
     நாடி அவர் மேல் கவி சொல்வார்
  நானிலம் தனில் வீணர்! அவரினும் வீணரே
     நரரைச் சுமக்கும் எளியோர்!
தேட்ட அறிவிலாத பெரு வீணரே அவரினும்
     சேர் ஒரு வரத்தும் இன்றிச்
  செலவு செய்வோர் அதிக வீணராம்! வீணனாய்த்
     திரியும் எளியேனை ஆட்கொண்டு
ஆட்டம் செய்யும் பத அம்புயம் முடியின் மேல் வைத்த
     அமலனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை