57. கெடுவன
மூப்பு ஒருவர்
இல்லாத குமரி குடி வாழ்க்கையும்,
மூது அரண் இலாத நகரும்,
மொழியும் வெகு நாயகர் சேரிடமும், வரும் எதுகை
மோனை இில்லாத கவியும்
காப்பு அமைவு இலாததோர் நந்தவனமும்,நல்ல
கரை இலா நிறையே அரியும்,
கசடறக் கற்காத வித்தையும், உபதேச
காரணன் இலாத தெளிவும்,
கோப்பு உள விநோதம் உடையோர் அருகு புகழாத
கோதையர் செய் கூத்தாட்டமும்,
குளிர் புனல் நிறைந்து வரும் ஆற்றோரம் அதினின்று
கோடு அயர்ந்து ஓங்கு தருவும்,
ஆப்பது இல்லாத தேர் இவை எலாம் ஒன்றாகும்
ஐயனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|