6. நன்மாணாக்கர்
இயல்
வைதாலும்
ஓர்கொடுமை செய்தாலு மோசீறி
மாறாது இகழ்ந்தாலுமோ
மனது சற்றாகிலும் கோணாது, நாணாது,
மாதா பிதா எனக்குப்
பொய்யாமல் நீ என்று கனிவொடும் பணிவிடை
புரிந்து, பொருள் உடல் ஆவியும்
புனித! உன்றனது எனத் தத்தம் செய்து இரவுபகல்
போற்றி, மலர் அடியில் வீழ்ந்து,
மெய்யாகவே பரவி உபதேசம் அதுபெற
விரும்புவோர் சற்சீடராம்
வினைவேர் அறும்படி அவர்க்கு அருள் செய்திடுவதே
மிக்க தேசிகரது கடன்
ஐயா! புரம் பொடிபடச் செய்த செம்மலே!
அண்ணல் எமது அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|