61. கோடி உடுக்கும் நாள்

கறைபடாது ஒளி சேரும் ஆதிவாரம் தனில்
     கட்டலாம் புதிய சீலை;
  கலை மதிக்கு ஆகாது; பலகாலும் மழையினில்
     கடிது நனைவுற்று ஒழிதரும்;
குறைபடாது இடர் வரும்; வீரியம் போம், அரிய
     குருதி வாரம் தனக்கு;
  கொஞ்ச நாளில் கிழியும், வெற்றி போம் புந்தியில்;
     குருவாரம் அதில் அணிந்தால்,
மறைபடாது அழகு உண்டு, மேன்மேலும் நல் ஆடை
     வரும்; இனிய சுக்கிரற்கோ
  வாழ்வு உண்டு, திருவு உண்டு, பொல்லாத சனியற்கு
     வாழ்வு போம், மரணம் உண்டாம்;
அறைகின்ற வேத ஆகமத்தின் வடிவாய் விளங்கு
     அமலனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை