61.
கோடி உடுக்கும் நாள்
கறைபடாது ஒளி
சேரும் ஆதிவாரம் தனில்
கட்டலாம் புதிய சீலை;
கலை மதிக்கு ஆகாது; பலகாலும் மழையினில்
கடிது நனைவுற்று ஒழிதரும்;
குறைபடாது இடர் வரும்; வீரியம் போம், அரிய
குருதி வாரம் தனக்கு;
கொஞ்ச நாளில் கிழியும், வெற்றி போம் புந்தியில்;
குருவாரம் அதில் அணிந்தால்,
மறைபடாது அழகு உண்டு, மேன்மேலும் நல் ஆடை
வரும்; இனிய சுக்கிரற்கோ
வாழ்வு உண்டு, திருவு உண்டு, பொல்லாத சனியற்கு
வாழ்வு போம், மரணம் உண்டாம்;
அறைகின்ற வேத ஆகமத்தின் வடிவாய் விளங்கு
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|