63. சகுனம் - 2
நரி மயில்
பசுங்கிள்ளை கோழி கொக்கொடு காக்கை
நாவி சிச்சிலி ஓந்தி தான்
நரையான் கடுத்தவாய்ச் செம்போத்துடன் மேதி
நாடரிய சுரபி மறையோர்
வரி உழுவை முயல் இவை அனைத்தும் வலம் ஆயிடின்
வழிப்பயணம் ஆகை நன்றாம்;
மற்றும் இவை அன்றியே குதிரை அனுமானித்தல்,
வாய்ச்சொல் வாவா என்றிடல்,
தருவளை தொனித்திடுதல், கொம்பு கிடு முடி அரசு
தப்பட்டை ஒலி வல்வேட்டு
தனிமணி முழக்கு எழுதல் இவை எலாம் ஊர்வழி
தனக்கு ஏக நன்மை என்பர்!
அருணகிரண உதயம் தருண பானுவை அனைய
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|