67. மனை கோலுவதற்கு மாதம்

சித்திரைத் திங்கள் தனில் மனைகோல மனைபுகச்
     செல்வம் உண்டு அதினும் நலமே
  சேரும் வைகாசிக்கு; மேனாள் அரன் புரம்
     தீயிட்டது ஆனி ஆகா;
வெற்றி கொள் இராகவன் தேவி சிறைசேர் கடகம்
     வீறு அல்ல; ஆவணி சுகம்;
  மேவிடும் கன்னி இரணியன் மாண்டது ஆகாது;
     மேன்மை உண்டு ஐப்பசிக்கே;
உத்தமம் கார்த்திகைக்கு ஆகாது மார்கழியில்
     ஓங்கு பாரதம் வந்த நாள்;
  உயர் உண்டு மகரத்தில்; மாசி மாதத்தில் விடம்
     உம்பர் கோன் உண்டது ஆகாது;
அத்த நீ! மாரனை எரித்த பங்குனி தானும்
     ஆகுமோ! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை