67.
மனை கோலுவதற்கு மாதம்
சித்திரைத்
திங்கள் தனில் மனைகோல மனைபுகச்
செல்வம் உண்டு அதினும் நலமே
சேரும் வைகாசிக்கு; மேனாள் அரன் புரம்
தீயிட்டது ஆனி ஆகா;
வெற்றி கொள் இராகவன் தேவி சிறைசேர் கடகம்
வீறு அல்ல; ஆவணி சுகம்;
மேவிடும் கன்னி இரணியன் மாண்டது ஆகாது;
மேன்மை உண்டு ஐப்பசிக்கே;
உத்தமம் கார்த்திகைக்கு ஆகாது மார்கழியில்
ஓங்கு பாரதம் வந்த நாள்;
உயர் உண்டு மகரத்தில்; மாசி மாதத்தில் விடம்
உம்பர் கோன் உண்டது ஆகாது;
அத்த நீ! மாரனை எரித்த பங்குனி தானும்
ஆகுமோ! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|