69. பூப்பு வாரம்

அருக்கனுக்கு அதி ரோகி ஆவள்;நற் சோமனுக்கு
     ஆன கற்புடையள் ஆவாள்;
  அங்காரகற்கு வெகு துக்கி ஆவாள்;புந்தி
     அளவில் பைங் குழவி பெறுவாள்;
திருத்தகு வியாழத்தின் மிக்கசம் பத்தினொடு
     சிறுவரைப் பெற்று எடுப்பாள்;
  சீர் உடைய பார்க்கவற்கு அதிபோகவதியும் ஆம்;
     திருவும் உண்டாய் இருப்பாள்;
கருத்து அழிந்து எழில் குன்றி வறுமை கொண்டு அலைகுவாள்
     காரி வாரத்தில் ஆகில்;
  களப முலை மடமாதர் புட்பவதியாம் வார
     கால பலன் என்று உரை செய்வார்;
அருத்தியுடன் எளியேனை ஆட்கொண்ட சோதியே!
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை