7.
பொருள்செயல் வகை
புண்ணிய
வசத்தினால் செல்வம் அது வரவேண்டும்;
பொருளை ரட்சிக்க வேண்டும்
புத்தியுடன் அது ஒன்று நூறாகவே செய்து
போதவும் வளர்க்க வேண்டும்;
உண்ண வேண்டும்; பின்பு நல்ல வத்ராபரணம்
உடலில் தரிக்க வேண்டும்;
உற்ற பெரியோர் கவிஞர் தமர் ஆதுலர்க்கு உதவி
ஓங்கு புகழ் தேட வேண்டும்;
மண்ணில்வெகு தருமங்கள் செயவேண்டும்; உயர்மோட்ச
வழிதேட வேண்டும்; அன்றி,
வறிதில் புதைத்து வைத்து ஈயாத பேர்களே
மார்க்கம் அறியாக் குருடராம்
அண்ணலே! கங்கா குலத்தலைவன் மோழைதரும்
அழகன்எமது அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|