70. பூப்பு இலக்கினம்

வறுமை தப்பாது வரும் மேடத்தில்; இடபத்தில்
     மாறாது விபசாரி ஆம்;
  வாழ்வு உண்டு போகம் உண்டாகும் மிதுனம்; கடகம்
     வலிதினிற் பிறரை அணைவாள்;
சிறுமை செயும் மிடி சேர்வள் மிருகேந்திரற்கு எனில்
     சீர்பெறுவள் கன்னி என்னில்;
  செட்டுடையள் துலை எனில்; பிணியால் மெலிந்திடுவள்
     தேளினுக்குத்; தனுசு எனில்
நெறி சிதைவள், பூருவத்து அபரநெறி உடையளாம்;
     நீள்மகரம் மானம் இலளாம்;
  நிறைபோகவதி கும்பம் எனில்; மீனம் என்னிலோ
     நெடிய பேரறிவு உடையளாம்;
அறிவாளர் மடமாதர் தமையறி இராசிபலன்
     அது என்பர்; அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை