70.
பூப்பு இலக்கினம்
வறுமை தப்பாது
வரும் மேடத்தில்; இடபத்தில்
மாறாது விபசாரி ஆம்;
வாழ்வு உண்டு போகம் உண்டாகும் மிதுனம்; கடகம்
வலிதினிற் பிறரை அணைவாள்;
சிறுமை செயும் மிடி சேர்வள் மிருகேந்திரற்கு எனில்
சீர்பெறுவள் கன்னி என்னில்;
செட்டுடையள் துலை எனில்; பிணியால் மெலிந்திடுவள்
தேளினுக்குத்; தனுசு எனில்
நெறி சிதைவள், பூருவத்து அபரநெறி உடையளாம்;
நீள்மகரம் மானம் இலளாம்;
நிறைபோகவதி கும்பம் எனில்; மீனம் என்னிலோ
நெடிய பேரறிவு உடையளாம்;
அறிவாளர் மடமாதர் தமையறி இராசிபலன்
அது என்பர்; அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|