72. மாணிக்கங்கள்

சுழி சுத்தமாய் இருந்து அதிலும் படைக்கான
     துரகம் ஓர் மாணிக்கம் ஆம்;
  சூழ்புவிக்கு அரசனாய் அதிலே விவேகம் உள
     துரையும் ஓர் மாணிக்கம் ஆம்;
பழுது அற்ற அதி ரூபவதியுமாய்க் கற்புடைய
     பாவையோர் மாணிக்கம் ஆம்;
  பலகலைகள் கற்று அறி அடக்கம் உள பாவலன்
     பார்க்கிலோர் மாணிக்கம் ஆம்;
ஒழிவு அற்ற செல்வனாய் அதிலே விவேகியாம்
     உசிதனோர் மாணிக்கம் ஆம்;
  உத்தம குலத்து உதித்து அதிலுமோ மெய்ஞ்ஞானம்
     உடையனோர் மாணிக்கம் ஆம்;
அழிவற்ற வேத ஆகமத்தின் வடிவாய் விளங்கு
     அமலனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை