72.
மாணிக்கங்கள்
சுழி சுத்தமாய்
இருந்து அதிலும் படைக்கான
துரகம் ஓர் மாணிக்கம் ஆம்;
சூழ்புவிக்கு அரசனாய் அதிலே விவேகம் உள
துரையும் ஓர் மாணிக்கம் ஆம்;
பழுது அற்ற அதி ரூபவதியுமாய்க் கற்புடைய
பாவையோர் மாணிக்கம் ஆம்;
பலகலைகள் கற்று அறி அடக்கம் உள பாவலன்
பார்க்கிலோர் மாணிக்கம் ஆம்;
ஒழிவு அற்ற செல்வனாய் அதிலே விவேகியாம்
உசிதனோர் மாணிக்கம் ஆம்;
உத்தம குலத்து உதித்து அதிலுமோ மெய்ஞ்ஞானம்
உடையனோர் மாணிக்கம் ஆம்;
அழிவற்ற வேத ஆகமத்தின் வடிவாய் விளங்கு
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|