73. உண்டிஇலையும் முறையும்

வாழைஇலை புன்னை புரசுடன் நல் குருக்கத்தி
     மா பலாத் தெங்கு பன்னீர்
  மாசில் அமுது உண்ணலாம்; உண்ணாதவோ அரசு
     வனசம் செழும்பாடலம்
தாழைஇலை அத்தி ஆல் ஏரண்ட பத்திரம்
     சகதேவம் முள்முருக்குச்
  சாரும் இவை அன்றி, வெண்பால் எருக்கு இச்சில்இலை
     தனினும் உண்டிட ஒணாதால்;
தாழ்வு இலாச் சிற்றுண்டி நீர் அடிக்கடி பருகல்
     சாதங்கள் பல அருந்தல்
  சற்று உண்டல் மெத்த ஊண் இத்தனையும் மெய்ப்பிணி
     தனக்கு இடம் எனப் பருகிடார்;
ஆழி புடை சூழ் உலகில் வேளாளர் குலதிலகன்
     ஆகும் எமது அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே.

உரை