73.
உண்டிஇலையும் முறையும்
வாழைஇலை புன்னை
புரசுடன் நல் குருக்கத்தி
மா பலாத் தெங்கு பன்னீர்
மாசில் அமுது உண்ணலாம்; உண்ணாதவோ அரசு
வனசம் செழும்பாடலம்
தாழைஇலை அத்தி ஆல் ஏரண்ட பத்திரம்
சகதேவம் முள்முருக்குச்
சாரும் இவை அன்றி, வெண்பால் எருக்கு இச்சில்இலை
தனினும் உண்டிட ஒணாதால்;
தாழ்வு இலாச் சிற்றுண்டி நீர் அடிக்கடி பருகல்
சாதங்கள் பல அருந்தல்
சற்று உண்டல் மெத்த ஊண் இத்தனையும் மெய்ப்பிணி
தனக்கு இடம் எனப் பருகிடார்;
ஆழி புடை சூழ் உலகில் வேளாளர் குலதிலகன்
ஆகும் எமது அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே.
|