74.
கவிஞர் வறுமை
எழுதப் படிக்க
வகை தெரியாத மூடனை
இணை இலாச் சேடன் என்றும்,
ஈவது இல்லாத கன லோபியைச் சபை அதனில்
இணை இலாக் கர்ணன் என்றும்,
அழகு அற்ற வெகு கோர ரூபத்தை உடையோனை
அதிவடி மாரன் என்றும்,
ஆயுதம் எடுக்கவுந் தெரியாத பேடி தனை
ஆண்மை மிகு விசயன் என்றும்,
முழுவதும் பொய் சொல்லி அலைகின்ற வஞ்சகனை
மொழி அரிச்சந்த்ரன் என்றும்,
மூது உலகில் இவ்வணம் சொல்லியே கவிராசர்
முறையின்றி ஏற்பது என்னோ?
அழல் என உதித்து வரு விடம் உண்ட கண்டனே!
அமலனே! அருமை மதவேள்!
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|