75. கவிஞன்

தெள் அமிர்த தாரை என மதுரம் கதித்த பைந்
     தேன்மடை திறந்தது எனவே
  செப்பு முத்தமிழினொடு நாற்கவிதை நாற்பொருள்
     தெரிந்து உரை செய் திறமை உடனே
விள் அரிய காவியத்து உட்பொருள் அலங்காரம்
     விரி இலக்கண வி கற்பம்
  வேறும் உள தொன்னூல் வழக்கும் உலகத்து இயல்பும்
     மிக்க ப்ரபந்த வண்மை
உள்ள எல்லாம் அறிந்து அலை அடங்கும் கடலை
     ஒத்த அதிக சபை கண்ட போது
  ஓங்கு அலை ஒலிக்கின்ற கடல் போல் ப்ரசங்கம்
     அது உரைப்பவன் கவிஞன் ஆகும்!
அள்ளி விடம் உண்ட கனி வாயனே! நேயனே!
     அமலனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை