78. ஏது?
பொன் ஆசை
உள்ளவர்க்கு உறவு ஏது? குரு ஏது?
பொங்கு பசி உள்ள பேர்க்குப்
போதவே சுசி ஏது? ருசி ஏது? மயல் கொண்டு
பொது மாதர் வலை விழியிலே
எந்நாளும் அலைபவர்க்கு அச்சமொடு வெட்கம் ஏது
என்றென்றும் உறு கல்வி மேல்
இச்சை உள பேர்க்கு அதிக சுகமேது? துயிலேது?
வெளிதாய் இருந்து கொண்டே
பன் நாளும் அலைபவர்க்கு இகழ் ஏது? புகழ் ஏது?
பாரில் ஒருவர்க்கு அதிகமே
பண்ணியிடு மூடருக்கு அறம் ஏது மறம் அலால்?
பகர் நிரயம் ஒன்றுளது காண்!
அல் நாண வருகரி உரித்தணியும் மெய்யனே!
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|