79. மழைநாள் குறிப்பு

சித்திரைத் திங்கள் பதின் மூன்றுக்கு மேல் நல்ல
     சீரான பரணி மழையும்,
  தீதில் வைகாசியில் பூரணை கழிந்த பின்
     சேரும் நாலாம் நாளினில்
ஒத்து வரு மழையும், அவ் ஆனியில் தேய்பிறையில்
     ஓங்கும் ஏகாதசியினில்
  ஒளிர் பரிதி வீழ் பொழுதில் மந்தாரமும் மழையும்,
     உண்டாயிருந்து ஆடியில்
பத்தி வரு தேதி ஐந்தினில் ஆதி வாரமும்
     பகரும் ஆவணி மூல நாள்
  பரிதியும் மறைந்திடக் கனமழை பொழிந்திடப்
     பாரில் வெகு விளைவும் உண்டாம்;
அத்தனே! பைங்குவளை மாலையணி மார்பன் ஆம்
     அண்ணல் எமது அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை