8. ஒண்ணாது
வஞ்சகர்
தமைக்கூடி மருவ ஒணாது அன்பு இலார்
வாசலில் செல்ல ஒணாது;
வாது எவரிடத்திலும் புரிய ஒணாது அறிவு இலா
மடையர் முன் நிற்க ஒணாது;
கொஞ்சமேனும் தீது செய்ய ஒணாது ஒருவர் மேல்
குற்றம் சொல ஒண்ணாது அயல்
கோதையர்களோடு பரிகாசம் செய ஒண்ணாது;
கோள் உரைகள் பேச ஒணாது;
நஞ்சு தரும் அரவொடும் பழக ஒணாது இருள்வழி
நடந்து தனி ஏக ஒணாது
நதி பெருக்கு ஆகின் அதில் நீஞ்சல் செய்ய ஒண்ணாது;
நல்வழி மறக்க ஒணாது;
அஞ்சாமல் அரசர் முன் பேச ஒணாது இவைஎலாம்
அறியும் எமது அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|