8. ஒண்ணாது

வஞ்சகர் தமைக்கூடி மருவ ஒணாது அன்பு இலார்
     வாசலில் செல்ல ஒணாது;
  வாது எவரிடத்திலும் புரிய ஒணாது அறிவு இலா
     மடையர் முன் நிற்க ஒணாது;
கொஞ்சமேனும் தீது செய்ய ஒணாது ஒருவர் மேல்
     குற்றம் சொல ஒண்ணாது அயல்
  கோதையர்களோடு பரிகாசம் செய ஒண்ணாது;
     கோள் உரைகள் பேச ஒணாது;
நஞ்சு தரும் அரவொடும் பழக ஒணாது இருள்வழி
     நடந்து தனி ஏக ஒணாது
  நதி பெருக்கு ஆகின் அதில் நீஞ்சல் செய்ய ஒண்ணாது;
     நல்வழி மறக்க ஒணாது;
அஞ்சாமல் அரசர் முன் பேச ஒணாது இவைஎலாம்
     அறியும் எமது அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை