81. மறையோர் சிறப்பு

ஓர் ஆறு தொழிலையும் கைவிடார்; சௌச விதி
     ஒன்று தப்பாது புரிவார்;
  உதயாதியில் சென்று நீர் படிகுவார்; காலம்
     ஒரு மூன்றி னுக்கும் மறவாது
ஆராய்ந்து காயத்ரி அது செபிப்பார்; நாளும்
     அதிதி பூசைகள் பண்ணுவார்;
  யாகாதி கருமங்கள் மந்த்ர கிரியா லோபம்
     இன்றியே செய்து வருவார்;
பேராசை கொண்டிடார்; வைதிக நன்மார்க்கமே
     பிழையாது இருக்கும் மறையோர்
  பெய்யெனப் பெய்யும் மு கில்; அவர் மகிமை எவர்களும்
     பேசுதற்கு அரிது அரிது காண்!
ஆர்ஆர் நெடும் சடில அமலனே! எனை ஆளும்
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை