81.
மறையோர் சிறப்பு
ஓர் ஆறு தொழிலையும்
கைவிடார்; சௌச விதி
ஒன்று தப்பாது புரிவார்;
உதயாதியில் சென்று நீர் படிகுவார்; காலம்
ஒரு மூன்றி னுக்கும் மறவாது
ஆராய்ந்து காயத்ரி அது செபிப்பார்; நாளும்
அதிதி பூசைகள் பண்ணுவார்;
யாகாதி கருமங்கள் மந்த்ர கிரியா லோபம்
இன்றியே செய்து வருவார்;
பேராசை கொண்டிடார்; வைதிக நன்மார்க்கமே
பிழையாது இருக்கும் மறையோர்
பெய்யெனப் பெய்யும் மு கில்; அவர் மகிமை எவர்களும்
பேசுதற்கு அரிது அரிது காண்!
ஆர்ஆர் நெடும் சடில அமலனே! எனை ஆளும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|