84. வேளாளர் சிறப்பு

யசனாதி கருமமும் தப்பாமல் வேதியர்
     இயற்றி நல் ஏர் பெறுவதும்,
  இராச்ய பாரம் செய்து முடி மன்னர் வெற்றி கொண்டு
     என்றும் நல் ஏர் பெறுவதும்,
வசனாதி தப்பாது தனதானியம் தேடி
     வசியர் நல் ஏர் பெறுவதும்,
  மற்றும் உள பேரெலாம் மிடி என்றிடாது அதிக
     வளமை பெற்று ஏர் பெறுவதும்,
திசைதோறும் உள்ள பல தேவாலயம் பூசை
     செய்யு நல் ஏர்பெறுவதும்,
  சீர் கொண்ட பைங்குவளை மாலை புனை வேளாளர்
     செய்யும் மேழிப் பெருமை காண்
அசையாது வெள்ளி மலை தனில் மேவி வாழ்கின்ற
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை