85. தானாபதி, அமைச்சன், படைத்தலைவன்

தன் அரசன் வலிமையும், பரராசர் எண்ணமும்,
     சாலமேல் வரு கருமமும்
  தான் அறிந்து அதி புத்தி உத்தி உண்டாயினோன்
     தானாதிபதி ஆகுவான்;
மன்னவர் மனத்தையும், கால தேசத்தையும்,
     வாழ்குடி படைத் திறமையும்,
  மந்திர ஆலோசனையும் எல்லாம் அறிந்தவன்
     வளமான மதிமந்திரி;
துன்னிய படைக்குணம் கரிபரி பரீட்சையே,
     சூழ்பகைவர் புரி சூழ்ச்சியும்,
  தோலாத வெற்றியும் திடமான சித்தி உள
     சூரனே சேனாதிபன்
அன்னையினும் நல்ல மலை மங்கை பங்காளனே!
     அனகனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை