85.
தானாபதி, அமைச்சன், படைத்தலைவன்
தன் அரசன்
வலிமையும், பரராசர் எண்ணமும்,
சாலமேல் வரு கருமமும்
தான் அறிந்து அதி புத்தி உத்தி உண்டாயினோன்
தானாதிபதி ஆகுவான்;
மன்னவர் மனத்தையும், கால தேசத்தையும்,
வாழ்குடி படைத் திறமையும்,
மந்திர ஆலோசனையும் எல்லாம் அறிந்தவன்
வளமான மதிமந்திரி;
துன்னிய படைக்குணம் கரிபரி பரீட்சையே,
சூழ்பகைவர் புரி சூழ்ச்சியும்,
தோலாத வெற்றியும் திடமான சித்தி உள
சூரனே சேனாதிபன்
அன்னையினும் நல்ல மலை மங்கை பங்காளனே!
அனகனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|