88. பல்துறை

தாம் புரி தவத்தையும் கொடையையும் புகழுவோர்
     தங்களுக்கு அவை தழுவுறா!
  சற்றும் அறிவில்லாமல் அந்தணரை நிந்தை செய்
     தயவிலோர் ஆயுள் பெருகார்!
மேம்படு நறும் கலவை மாலைதயிர் பால் புலால்
     வீடு நல் செந்நெல் இவைகள்
  வேறொருவர் தந்திடினும் மனுமொழி அறிந்த பேர்
     விலை கொடுத்தே கொள்ளுவார்!
தேன் கனி கிழங்கு விறகு இலை இவை அனைத்தையும்
     தீண்டரிய நீசர் எனினும்
  சீர் பெற அளிப்பரேல் இகழாது கைக்கொள்வர்
     சீலம் உடையோர் என்பரால்!
ஆன் கொடி உயர்த்த உமை நேசனே! ஈசனே!
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை