89.
முப்பொருள் (தத்துவத் திரயம்)
பூதம் ஓர் ஐந்துடன்,
புலன் ஐந்தும், ஞானம்
பொருந்தும் இந்திரியம் ஐந்தும்,
பொருவில்கன் மேந்திரியம் ஐந்தும், மனம் ஆதியாம்
புகல் அரிய கரணம் நான்கும்,
ஓதினோர் இவை ஆன்ம தத்துவம் எனச் சொல்வர்;
உயர்கால நியதி கலையோடு
ஓங்கி வரு வித்தை, ராகம், புருடன் மாயை என்று
உரை செய்யும் ஓர் ஏழுமே
தீதில் வித்யாதத் தவம் என்றிடுவர்; இவை அலால்
திகழ் சுத்த வித்தை ஈசன்,
சீர் கொள் சாதாக்கியம், சத்தி, சிவம் ஐந்துமே
சிவதத்வம் என்று அறைகுவார்;
ஆதி வட நீழலிற் சனகாதியார்க்கு அருள் செய்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே.
|