94. முப்பத்திரண்டு அறங்கள்

பெறுமில், பெறுவித்தலொடு, காதோலை, நாள்தொறும்
     பிள்ளைகள் அருந்திடும் பால்,
  பேசரிய சத்திரம், மடம், ஆவுரிம் சுகல்
     பெண்போகம், நாவிதன், வணான்,
மறை மொழிகணாடி, தண்ணீர், தலைக்கு எண்ணெய் பசு
     வாயின் உறை, பிணம் அடக்கல்,
  வாவி, இறும் உயிர் மீட்டல், தின் பொருள், அடைக்காய்
     வழங்கல், சுண்ணாம்பு உதவுதல்,
சிறை உறுபவர்க்கு அமுது, வேற்றிலம் காத்தல், பொழில்
     செய்தல், முன் நூலின் மனம்,
  திகழ் விலங்கு ஊண், பிச்சை, அறு சமயருக்கு உண்டி,
     தேவர் ஆலாயம், அவுடதம்;
அறைதல் கற்போர்க்கு அன்னம் நால் எட்டு அறங்களும் முன்
     அன்னை செயல்; அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே.

உரை