96. புராணம்
தலைமை சேர்
பௌடிகம், இலிங்கம், மார்க்கண்டம், எழில்
சாரும் வாமனம், மச்சமே,
சைவம், பெருங் கூர்மம், வருவராகம், கந்த
சரிதமே, பிரமாண்டமும்,
தலைமை சேர் இப்பத்தும் உயர் சிவபுராணம் ஆம்;
நெடிய மால் கதை; வைணவம்
நீதி சேர் காருடம், நாரதம், பாகவதம்,
நீடிய புராணம் நான்காம்;
கலை வளர் சொல் பதுமமொடு, கிரம கைவர்த்தமே,
கமலாலயன் காதை ஆம்;
கதிரவன் காதையே சூரிய புராணமாம்;
கனல் காதை ஆக்கினேயம்;
அலை கொண்ட நதியும் வெண் மதியும் அறுகும் புனையும்
அத்தனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|