96. புராணம்

தலைமை சேர் பௌடிகம், இலிங்கம், மார்க்கண்டம், எழில்
     சாரும் வாமனம், மச்சமே,
  சைவம், பெருங் கூர்மம், வருவராகம், கந்த
     சரிதமே, பிரமாண்டமும்,
தலைமை சேர் இப்பத்தும் உயர் சிவபுராணம் ஆம்;
     நெடிய மால் கதை; வைணவம்
  நீதி சேர் காருடம், நாரதம், பாகவதம்,
     நீடிய புராணம் நான்காம்;
கலை வளர் சொல் பதுமமொடு, கிரம கைவர்த்தமே,
     கமலாலயன் காதை ஆம்;
  கதிரவன் காதையே சூரிய புராணமாம்;
     கனல் காதை ஆக்கினேயம்;
அலை கொண்ட நதியும் வெண் மதியும் அறுகும் புனையும்
     அத்தனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை