97. புகழ்ச்சி
பருகாத அமுது
ஒருவர் பண்ணாத பூடணம்,
பாரில் மறையாத நிதியம்,
பரிதி கண்டு அலராத நிலவு கண்டு அலராத
பண்புடைய பங்கேருகம்
கருகாத புயல், கலைகள் அருகாத திங்கள், வெம்
கானில் உறையாத சீயம்;
கருதரிய இக்குணம் அனைத்தும் உண்டான பேர்
காசினியில் அருமை ஆகும்!
தெரிய உரை செய்யின் மொழி, கீர்த்தி, வரு கல்வியொடு,
சீர் இதயம், ஈகை, வதனம்,
திடமான வீரம், இவை என்று அறிகுவார்கள்! இச்
செகமெலாம் கொண்டாடவே
அருள் கற்பதரு என்ன ஓங்கிடும் தான துரை
ஆகும் எமது அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|