98. திருமால் அவதாரம்

சோமுக அசுரனை முன் வதைத்து அமரர் துயர் கெடச்
     சுருதி தந்தது மச்சம் ஆம்;
  சுரர் தமக்கு அமுது ஈந்தது ஆமையாம்; பாய் போல்
     சுருட்டி மாநிலம் எடுத்தே
போம் இரணியாக்கு அதனை உயிருண்டது ஏனம் ஆம்;
     பொல்லாத கனகன் உயிரைப்
  போக்கியது நரசிங்கம்; உலகு அளந்து ஓங்கியது
     புனித வாமன மூர்த்தி ஆம்;
ஏம் உறும் இராவணனை வென்றவன் இராகவன்;
     இரவி குலம் வேர் அறுத்தோன்
  ஏர் பரசு இராமன்; வரு கண்ணனொடு பலராமன்
     இப் புவி பயம் தவிர்த்தோர்
ஆம் இனிய கல்கி இனி மேல் வருவது இவை பத்தும்
     அரி வடிவம்; அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை