98.
திருமால் அவதாரம்
சோமுக அசுரனை
முன் வதைத்து அமரர் துயர் கெடச்
சுருதி தந்தது மச்சம் ஆம்;
சுரர் தமக்கு அமுது ஈந்தது ஆமையாம்; பாய் போல்
சுருட்டி மாநிலம் எடுத்தே
போம் இரணியாக்கு அதனை உயிருண்டது ஏனம் ஆம்;
பொல்லாத கனகன் உயிரைப்
போக்கியது நரசிங்கம்; உலகு அளந்து ஓங்கியது
புனித வாமன மூர்த்தி ஆம்;
ஏம் உறும் இராவணனை வென்றவன் இராகவன்;
இரவி குலம் வேர் அறுத்தோன்
ஏர் பரசு இராமன்; வரு கண்ணனொடு பலராமன்
இப் புவி பயம் தவிர்த்தோர்
ஆம் இனிய கல்கி இனி மேல் வருவது இவை பத்தும்
அரி வடிவம்; அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|