தொடக்கம் |
|
|
1.
உயர் பிறப்பு
கடல் உலகில் வாழும் உயிர் எழுபிறப்பின் உள்மிக்க
காட்சிபெறு நர சன்மமாய்க்
கருதப் பிறத்தல் அரிது அதினும்உயர் சாதியில்
கற்புவழி வருதல் அரிது;
வடிவமுடன் அவயவம் குறையாது பிழையாது
வருதல் அதுதனினும் அரிது;
வந்தாலும் இது புண்யம் இதுபாவம் என்று எண்ணி
மாசில்வழி நிற்றல் அரிது;
நெடிய தனவான் ஆதல் அரிது அதில் இரக்கம்உள
நெஞ்சினோன் ஆதல் அரிது;
நேசமுடன் உன்பதத்து அன்பனாய் வருதல்இந்
நீள்நிலத்து அதினும் அரிதாம்;
அடியவர்க்கு அமுதமே! மோழை பூபதி பெற்ற
அதிபன் எமது அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|
|
|
உரை
|
|
|
|
|
2.
இல்லாளின் சிறப்பு
கணவனுக்கு இனியளாய், ம்ருதுபாஷியாய், மிக்க
கமலைநிகர் ரூபவதியாய்க்,
காய்சினம் இலாளுமாய், நோய்பழி இலாத ஓர்
கால்வழியில் வந்தவளுமாய்,
மணமிக்க நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு என்ன
வரும் இனிய மார்க்கவதியாய்,
மாமிமாமற்கு இதம் செய்பவளுமாய், வாசல்
வரு விருந்து ஓம்புபவளாய்,
இணைஇல் மகிழ்நன் சொல்வழி நிற்பவளுமாய்வந்தி
என் பெயர் இலாதவளுமாய்,
இரதி எனவே லீலை புரிபவளுமாய்ப் பிறர்தம்
இல்வழி செலாதவளுமாய்,
அணியிழை ஒருத்தி உண்டாயின் அவள் கற்புடையள்
ஆகும்;எமது அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|
|
|
உரை
|
|
|
|
|
3.
நன்மக்கட் பேறு
தம் குலம் விளங்கிடப் பெரியோர்கள் செய்துவரு
தருமங்கள் செய்து வரலும்,
தன்மம் மிகு தானங்கள் செய்தலும், கனயோக
சாதகன் எனப்படுதலும்,
மங்குதல் இலாத தன் தந்தை தாய் குருமொழி
மறாது வழிபாடு செயலும்,
வழிவழி வரும் தமது தேவதா பத்திபுரி
மார்க்கமும், தீர்க்க ஆயுளும்,
இங்கித குணங்களும், வித்தையும், புத்தியும்,
ஈகையும், சன்மார்க்கமும்
இவையெலாம் உடையவன் புதல்வனாம்; அவனையே
ஈன்றவன் புண்யவானாம்;
அங்கச விரோதியே! சோதியே! நீதிசேர்
அரசன் எமது அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|
|
|
உரை
|
|
|
|
|
4.
உடன் பிறப்பு
கூடப் பிறந்தவர்க்கு எய்து துயர் தமது துயர்
கொள்சுகம் தம் சுகம் எனக்
கொண்டுதாம் தேடுபொருள் அவர் தேடு பொருள்
அவர்கொள் கோது இல்புகழ் தம் புகழெனத்,
தேடு உற்ற அவர் நிந்தை தம் நிந்தை தம் தவம்
தீது இல்அவர் தவம் ஆம் எனச்
சீவன் ஒன்று உடல் வேறு இவர்க்கு என்ன, ஐந்தலைச்
சீறு அரவம் மணிவாய் தொறும்
கூடு உற்ற இரை எடுத்து ஓரு உடல் நிறைத்திடும்
கொள்கைபோல் பிரிவு இன்றியே
கூடிவாழ்பவர் தம்மையே சகோதரர் எனக்
கூறுவதுவே தருமமாம்;
ஆடிச் சிவந்த செந்தாமரைப் பாதனே!
அண்ணல் எமது அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|
|
|
உரை
|
|
|
|
|
5.
நல்லாசிரியர் இயல்
வேதாந்த சித்தாந்த வழி தெரிந்து ஆசார
விவரம் விஞ்ஞான பூர்ணம்
வித்யாம் விசேடம் சற்குணம் சத்தியம் சம்பன்னம்
வீரவைராக்யம் முக்யம்
சாதாரணப் பிரியம் யோகமார்க்க ஆதிக்யம்
சமாதி நிஷ்ட அனுபவராய்ச்,
சட்சமய நிலைமையும் பரமந்த்ர பரதந்த்ர
தருமமும் பரசமயமும்
நீதியின் உணர்ந்து, தத்துவ மார்க்கராய்ப், பிரம
நிலைகண்டு பாசம் இலராய்,
நித்திய ஆனந்த சைதன்யராய், ஆசை அறு
நெறியுளோர் சற்குரவராம்
ஆதாரமாய் உயிர்க்கு உயிராகி எவையுமாம்
அமல! உமது அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|
|
|
உரை
|
|
|
|
|
6. நன்மாணாக்கர்
இயல்
வைதாலும்
ஓர்கொடுமை செய்தாலு மோசீறி
மாறாது இகழ்ந்தாலுமோ
மனது சற்றாகிலும் கோணாது, நாணாது,
மாதா பிதா எனக்குப்
பொய்யாமல் நீ என்று கனிவொடும் பணிவிடை
புரிந்து, பொருள் உடல் ஆவியும்
புனித! உன்றனது எனத் தத்தம் செய்து இரவுபகல்
போற்றி, மலர் அடியில் வீழ்ந்து,
மெய்யாகவே பரவி உபதேசம் அதுபெற
விரும்புவோர் சற்சீடராம்
வினைவேர் அறும்படி அவர்க்கு அருள் செய்திடுவதே
மிக்க தேசிகரது கடன்
ஐயா! புரம் பொடிபடச் செய்த செம்மலே!
அண்ணல் எமது அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|
|
|
உரை
|
|
|
|
|
7.
பொருள்செயல் வகை
புண்ணிய
வசத்தினால் செல்வம் அது வரவேண்டும்;
பொருளை ரட்சிக்க வேண்டும்
புத்தியுடன் அது ஒன்று நூறாகவே செய்து
போதவும் வளர்க்க வேண்டும்;
உண்ண வேண்டும்; பின்பு நல்ல வத்ராபரணம்
உடலில் தரிக்க வேண்டும்;
உற்ற பெரியோர் கவிஞர் தமர் ஆதுலர்க்கு உதவி
ஓங்கு புகழ் தேட வேண்டும்;
மண்ணில்வெகு தருமங்கள் செயவேண்டும்; உயர்மோட்ச
வழிதேட வேண்டும்; அன்றி,
வறிதில் புதைத்து வைத்து ஈயாத பேர்களே
மார்க்கம் அறியாக் குருடராம்
அண்ணலே! கங்கா குலத்தலைவன் மோழைதரும்
அழகன்எமது அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|
|
|
உரை
|
|
|
|
|
8. ஒண்ணாது
வஞ்சகர்
தமைக்கூடி மருவ ஒணாது அன்பு இலார்
வாசலில் செல்ல ஒணாது;
வாது எவரிடத்திலும் புரிய ஒணாது அறிவு இலா
மடையர் முன் நிற்க ஒணாது;
கொஞ்சமேனும் தீது செய்ய ஒணாது ஒருவர் மேல்
குற்றம் சொல ஒண்ணாது அயல்
கோதையர்களோடு பரிகாசம் செய ஒண்ணாது;
கோள் உரைகள் பேச ஒணாது;
நஞ்சு தரும் அரவொடும் பழக ஒணாது இருள்வழி
நடந்து தனி ஏக ஒணாது
நதி பெருக்கு ஆகின் அதில் நீஞ்சல் செய்ய ஒண்ணாது;
நல்வழி மறக்க ஒணாது;
அஞ்சாமல் அரசர் முன் பேச ஒணாது இவைஎலாம்
அறியும் எமது அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|
|
|
உரை
|
|
|
|
|
9. ஒன்றற்கு
ஒன்று அழகு
வாழ்மனை
தனக்கு அழகு குலமங்கை; குலமங்கை
வாழவினுக்கு அழகு சிறுவர்;
வளர்சிறுவருக்கு அழகு கல்வி;கல்விக்கு அழகு
மாநிலம் துதிசெய் குணமாம்;
சூழ்குணம் அதற்கு அழகு பேரறிவு; பேரறிவு
தோன்றிடில் அதற்கு அழகுதான்
தூயதவம், மேன்மை, உபகாரம், விரதம், பொறுமை
சொல்அரிய பெரியோர்களைத்
தாழ்தல், பணி விடைபுரிதல், சீலம், நேசம், கருணை
சாற்றும் இவை அழகு என்பர் காண்
சௌரி, மலரோன், அமரர், முனிவர், முச்சுடர் எலாம்
சரணம் எமை ரட்சி எனவே.
ஆழ்கடல் உதித்துவரு விடம் உண்ட கண்டனே!
அண்ணல் எமது அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|
|
|
உரை
|
|
|
|
|
10. ஒன்று
இல்லாமல் பயன்படாதவை
கோவில்
இல்லாத ஊர், நாசி இல்லா முகம்,
கொழுநன் இல்லாத மடவார்,
குணமது இல்லா வித்தை, மணமது இல்லாத மலர்,
குஞ்சரம் இலாத சேனை,
காவல் இல்லாத பயிர், பாலர் இல்லாத மனை,
கதிர் மதி இலாத வானம்,
கவிஞர் இல்லாத சபை, சுதி லயை இலாத பண்,
காவலர் இலாத தேசம்,
ஈவது இல்லாத தனம் நியமம் இல்லாத செபம்,
இசை லவணம் இல்லாத ஊண்,
இச்சை இல்லாத பெண் போக நலம், இவை தம்மின்
ஏது பலன் உண்டு? கண்டாய்!
ஆவி அனையாட்கு இடம் தந்தவா! கற்ப தரு
ஆகும் எமது அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|
|
|
உரை
|
|
|
|