தொடக்கம் |
|
|
31.
குணம் காணும் குறி
கற்றோர்கள்
என்பதைச் சீலமுடனே சொலும்
கனவாக்கினால் காணலாம்;
கற்பு உளார் என்பதைப் பார்க்கின்ற பார்வையொடு
கால்நடையினும் காணலாம்;
அற்றோர்கள் என்பதை ஒன்றினும் வாரா
அடக்கத்தினால் அறியலாம்;
அறம் உளோர் என்பதைப் பூததயை என்னும் நிலை
அது கண்டு தான் அறியலாம்;
வித்து ஓங்கு பயிரைக் கிளைத்து வரு துடியினால்
விளையும் என்றே அறியலாம்;
வீரம் உடையோர் என்பது ஓங்கி வரு தைரிய
விசேடத்தினால் அறியலாம்;
அத்தா! குணத்தினாற் குலநலம் தெரியலாம்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|
|
|
உரை
|
|
|
|
|
32.
கூடின் பயன்படல்
செத்தை பல
கூடி ஒரு கயிறாயின் அது கொண்டு
திண்கரியையும் கட்டலாம்!
திகழ்ந்த பல துளி கூடி ஆறாயின் வாவியொடு
திரள்ஏறி நிறைவிக்கலாம்!
ஒத்த நுண்பஞ்சு பல சேர்ந்து நூல் ஆயிடின்
உடுத்திடும் கலை ஆக்கலாம்!
ஓங்கி வரு கோலுடன் சீலையும் கூடினால்
உயர் கவிகை ஆ கொள்ளலாம்!
மற்றும் உயர் தண்டுலத்தோடு தவிடு உமி கூடின்
பல்கும் முளை விளைவிக்கலாம்!
மனமொத்த நேயமொடு கூடி ஒருவர்க்கு ஒருவர்
வாழின் வெகு வெற்றி பெறலாம்!
அற்ற கனியைப் பொருத்து அரி பிரமர் தேடரிய
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|
|
|
உரை
|
|
|
|
|
33.
வெற்றி இடம்
கலைவலாருக்கு அதிக
சயம் மதுரவாக்கிலே;
காமுகர்க்கு அதிக சயம்
ஓகைப் பொருளிலே;வரும் மருத்துவர்க்கோ சயம்
கை விசேடந் தன்னிலே;
நலமுடைய வேசையர்க்கு அழகிலே! அரசர்க்கு
நாளும் ரணசூரத்திலே
நற்றவர்க்கு அதிக சயம் உலகு புகழ் பொறையிலே;
ஞான வேதியர் தமக்கோ
குல மகிமை தன்னிலே; வைசியர்க்கோ சயம்
கூடிய துலாக்கோலிலே;
குற்றம் இல்லாத வேளாளருக்கோ சயம்
குறையாத கொழு முனையிலே;
அலைவுஇல் குதிரைக்கு நடை வேகத்தில் அதிக சயம்
ஆம் என்பர்; அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|
|
|
உரை
|
|
|
|
|
34.
ஒன்றின் இல்லாமையான் பாழ்படல்
தாம்பூல தாரணம் இலாததே
வரு பூர்ண
சந்த்ரன் நிகர் முக சூனியம்!
சற்சனர் இலாததே வெகுசனம் சேர்ந்து வாழ்
தரும் பெரிய நகர் சூனியம்!
மேம்பாடு இலாத மன்னவர்கள் வந்து ஆள்வதே
மிக்க தேசச் சூனியம்!
மிக்க சற்புத்திரன் இலாததே நலமான
வீறு சேர் கிருக சூனியம்!
சோம்பாத தலைவர் இல்லாததே வளமுடன்
சொல் உயர் சபா சூனியம்!
தொல் உலகில் அனைவர்க்கும் மா நிதியம் இல்லதே
சுத்த சூனியம் என்பர் காண்!
ஆம்பல் வதனத்தனைக் குகனை ஈன்று அருள் செய்த
அத்தனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|
|
|
உரை
|
|
|
|
|
35. மூடர்களில்
உயர்வு தாழ்வு
பெண் புத்தி கேட்கின்ற மூடரும், தந்தை தாய்
பிழைபுறம் சொலும் மூடரும்,
பெரியோர்கள் சபையிலே முகடேறி வந்தது
பிதற்றிடும் பெரு மூடரும்,
பண்புற்ற சுற்றம் சிரிக்கவே இழிவான
பழி தொழில் செய்திடும் மூடரும்,
பற்றற்ற பேர்க்கு முன் பிணை நின்று பின்பு போய்ப்
பரிதவித்திடும் மூடரும்,
கண் கெட்ட மாடென்ன ஓடி இரவலர் மீது
காய்ந்து வீழ்ந்திடும் மூடரும்,
கற்று அறிவு இலாத முழு மூடருக்கு இவர் எலாம்
கால் மூடர் அரை மூடர்காண்
அண்கற்ற நாவலர்க்கு ஆகவே தூது போம்
ஐயனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|
|
|
உரை
|
|
|
|
|
36.
இதற்கு இது வேண்டும்
தனக்கு வெகு புத்தி
உண்டாகினும் வேறொருவர்
தம் புத்தி கேட்க வேண்டும்;
தான் அதிக சூரனே ஆகினும் கூடவே
தள சேகரங்கள் வேண்டும்;
கனக்கின்ற வித்துவான் ஆகினும் தன்னினும்
கற்றோரை நத்த வேண்டும்;
காசினியை ஒரு குடையில் ஆண்டாலும் வாசலில்
கருத்துள்ள மந்த்ரி வேண்டும்;
தொனிக்கின்ற சங்கீத சாமர்த்தியன் ஆகினும்
சுதி கூட்ட ஒருவன் வேண்டும்;
சுடர் விளக்கு ஆயினும் நன்றாய் விளங்கிடத்
தூண்டு கோல் ஒன்று வேண்டும்;
அனல் கண்ணனே! படிக சங்கம் நிகர் வண்ணனே!
ஐயனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|
|
|
உரை
|
|
|
|
|
37.
வறுமையின் கொடுமை
மேலான சாதியில்
உதித்தாலும் அதில் என்ன?
வெகு வித்தை கற்றும் என்ன?
மிக்க அதி ரூபமொடு சற்குணம் இருந்து என்ன?
மிகுமானி ஆகில் என்ன?
பாலான மொழி உடையன் ஆய் என்ன? ஆசார
பரனாய் இருந்தும் என்ன?
பார் மீது வீரமொடு ஞானவான் ஆய்என்ன?
பாக்கியம் இலாத போது;
வாலாய மாய்ப் பெற்ற தாயும் சலித்திடுவள்!
வந்த சுற்றமும் இகழுமே!
மரியாதை இல்லாமல் அனைவரும் பேசுவார்!
மனைவியும் தூறு சொல்வாள்!
ஆலாலம் உண்ட கனி வாயனே! நேயனே!
அனகனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|
|
|
உரை
|
|
|
|
|
38. இழிவு
இரப்பவன் புவி
மீதில் ஈனன்; அவனுக்கு இல்லை
என்னும் அவன் அவனின் ஈனன்
ஈகின்ற பேர் தம்மை ஈயாமலே கலைத்
திடும் மூடன் அவனில் ஈனன்!
உரைக்கின்ற பேச்சிலே பலன் உண்டு எனக் காட்டி
உதவிடான் அவனில் ஈனன்!
உதவவே வாக்கு உரைத்தில்லை என்றே சொலும்
உலுத்தனோ அவனில் ஈனன்!
பரக்கின்ற யாசகர்க்கு ஆசை வார்த்தைகள் சொலிப்
பலகால் அலைந்து திரியப்
பண்ணியே இல்லை என்றிடும் கொடிய பாவியே
பாரில் எல்லோர்க்கும் ஈனன்!
அரக்கு இதழ்க் குமுதவாய் உமை நேசனே! எளியர்
அமுதனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|
|
|
உரை
|
|
|
|
|
39. மறைவும்
வெளிப்படையும்
சென்மித்த வருடமும்,
உண்டான அத்தமும்,
தீது இல்கிரகச் சாரமும்,
தின்று வரும் அவுடதமும், மேலான தேசிகன்
செப்பிய மகா மந்த்ரமும்,
புன்மை அவமானமும், தானமும், பைம்பொன் அணி
புனையும் மடவார் கலவியும்,
புகழ் மேவும் மானமும், இவை ஒன்பதும் தமது
புந்திக்குளே வைப்பதே
தன்மம் என்று உரை செய்வர்; ஒன்னார் கருத்தையும்
தன் பிணியையும் பசியையும்,
தான் செய்த பாவமும், இவை எலாம் வேறொருவர்
தம் செவியில் வைப்பது இயல்பாம்!
அல்மருவு கண்டனே! மூன்று உலகும் ஈன்ற உமை
அன்பனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|
|
|
உரை
|
|
|
|
|
40. வானவர்
கால அளவை
சதுர்யுகம் ஓர்
இரண்டாயிரம் பிற்படின்
சதுமுகன்கு ஒருதினம் அதாம்!
சாற்றும் இத் தினம் ஒன்றிலே இந்த்ர பட்டங்கள்
தாமும் ஈரேழ் சென்றிடும்!
மதிமலியும் இத்தொகையின் அயன் ஆயுள் நூறு போய்
மாண்ட போது ஒரு கற்பம்ஆம்!
மாறிவரு கற்பம் ஒரு கோடி சென்றால் நெடிய
மால் தனக்கோர் தினம் அதாம்!
துதி பரவும் இத்தொகையில் ஒருகோடி நெடியமால்
தோன்றியே போய் மறைந்தால்
தோகையோர் பாகனே! நீநகைத்து அணிமுடி
துளக்கிடும் காலம் என்பர்!
அதிகம் உள பல தேவர் தேவனே! தேவர்கட்கு
அரசனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|
|
|
உரை
|
|
|
|