தொடக்கம் |
|
|
91. காமன்
துணைப் பொருள்கள்
வெஞ்சிலை
செழும் கழை; வில்நாரி கரு வண்டினம்;
மேல் விடும் கணைகள் அலராம்;
வீசிடும் தென்றல் தேர்; பைங்கிள்ளையே பரிகள்;
வேழம் கெடாத இருள் ஆம்;
வஞ்சியர் பெரும் சேனை; கைதை உடைவாள்; நெடிய
வண்மை பெறு கடல் முரசம் ஆம்;
மகரம் பதாகை; வரு கோகிலம் காகளம்;
மனதே பெரும் போர்க்களம்;
சஞ்சரிக இசைபாடல்; குமுத நேயன் கவிகை;
சார்இரதியே மனைவி ஆம்;
தறுகண் மடமாதர் இளமுலை மகுடம் ஆம்; அல்குல்
தவறாது இருக்கும் இடம் ஆம்;
அஞ்சுகணை மார வேள்கு என்பர்; எளியோர்க்கு எலாம்
அமுதமே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|
|
|
உரை
|
|
|
|
|
92. பகை
கொள்ளத் தகாதவர்
மன்னவர்,
அமைச்சர், துர்ச்சனர், கோளர், தூதரொடு
மாறாத மர்மம் உடையோர்,
வலுவர், கருணீகர், மிகு பாகம் செய்து அன்னம் இடும்
மடையர், மந்திரவாதியர்,
சொன்னம் உடையோர் புலையர், உபதேசம் அது செய்வோர்
சூழ்வயித்தியர், கவிதைகள்
சொற்றிடும் புலவர் இவர் பதினைந்து பேரொடும்
சொப்பனந் தனில் ஆகிலும்
நன்னெறி அறிந்த பேர் பகை செய்திடார்கள் இந்
நானிலத்து என்பர் கண்டாய்!
நாரியோர் பாகனே! வேத ஆகமம் பரவும்
நம்பனே! அன்பர் நிதியே!
அன்னம் ஊர் பிரமனும் கண்ணனும் காணாத
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|
|
|
உரை
|
|
|
|
|
93.
நன்மை தீமை பகுத்துப் பயன் கொள்ளுதல்
சுவை சேர் கரும்பை
வெண் பாலைப் பருத்தியைச்
சொல்லும் நல் நெல்லை எள்ளைத்
தூய தெங்கின் கனியை எண்ணாத துட்டரைத்
தொண்டரைத் தொழு தொழும்பை
நவை தீரு மாறு கண்டித்தே பயன் கொள்வர்
நற்றமிழ்க் கவிவாணரை
நலம் மிக்க செழுமலரை ஓவியம் எனத் தக்க
நயம் உள்ள நாரியர் தமைப்
புவி மீதில் உபகார நெஞ்சரைச் சிறுவரைப்
போர் வீரரைத் தூயரைப்
போதவும் பரிவோடு இதம் செய்ய மிகு பயன்
புகழ் பெறக் கொள்வர் கண்டாய்
அவமதி தவிர்த்து என்னை ஆட்கொண்ட வள்ளலே!
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|
|
|
உரை
|
|
|
|
|
94. முப்பத்திரண்டு
அறங்கள்
பெறுமில், பெறுவித்தலொடு,
காதோலை, நாள்தொறும்
பிள்ளைகள் அருந்திடும் பால்,
பேசரிய சத்திரம், மடம், ஆவுரிம் சுகல்
பெண்போகம், நாவிதன், வணான்,
மறை மொழிகணாடி, தண்ணீர், தலைக்கு எண்ணெய் பசு
வாயின் உறை, பிணம் அடக்கல்,
வாவி, இறும் உயிர் மீட்டல், தின் பொருள், அடைக்காய்
வழங்கல், சுண்ணாம்பு உதவுதல்,
சிறை உறுபவர்க்கு அமுது, வேற்றிலம் காத்தல், பொழில்
செய்தல், முன் நூலின் மனம்,
திகழ் விலங்கு ஊண், பிச்சை, அறு சமயருக்கு உண்டி,
தேவர் ஆலாயம், அவுடதம்;
அறைதல் கற்போர்க்கு அன்னம் நால் எட்டு அறங்களும் முன்
அன்னை செயல்; அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே.
|
|
|
உரை
|
|
|
|
|
95. இல்லறம்
தந்தை தாய்
சற்குருவை இட்ட தெய்வங்களைச்
சன்மார்க்கம் உள மனைவியைத்
தவறாத சுற்றத்தை ஏவாத மக்களைத்
தனை நம்பி வருவோர்களைச்
சிந்தை மகிழ்வு எய்தவே பணி விடை செய்வோர்களைத்
தென்புலத்தோர் வறிஞரைத்
தீதிலா அதிதியைப் பரிவு உடைய துணைவரைத்
தேனுவைப் பூசுரர் தமைச்
சந்ததம் செய்கடனை என்றும் இவை பிழையாது
தான் புரிந்திடல் இல்லறம்;
சாரு நலம் உடையராம் துறவறத்தோரும் இவர்
தம்முடன் சரியாயிடார்!
அந்தரி உயிர்க்கு எலாந் தாய் தனினும் நல்லவளுக்கு
அன்பனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|
|
|
உரை
|
|
|
|
|
96. புராணம்
தலைமை சேர்
பௌடிகம், இலிங்கம், மார்க்கண்டம், எழில்
சாரும் வாமனம், மச்சமே,
சைவம், பெருங் கூர்மம், வருவராகம், கந்த
சரிதமே, பிரமாண்டமும்,
தலைமை சேர் இப்பத்தும் உயர் சிவபுராணம் ஆம்;
நெடிய மால் கதை; வைணவம்
நீதி சேர் காருடம், நாரதம், பாகவதம்,
நீடிய புராணம் நான்காம்;
கலை வளர் சொல் பதுமமொடு, கிரம கைவர்த்தமே,
கமலாலயன் காதை ஆம்;
கதிரவன் காதையே சூரிய புராணமாம்;
கனல் காதை ஆக்கினேயம்;
அலை கொண்ட நதியும் வெண் மதியும் அறுகும் புனையும்
அத்தனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|
|
|
உரை
|
|
|
|
|
97. புகழ்ச்சி
பருகாத அமுது
ஒருவர் பண்ணாத பூடணம்,
பாரில் மறையாத நிதியம்,
பரிதி கண்டு அலராத நிலவு கண்டு அலராத
பண்புடைய பங்கேருகம்
கருகாத புயல், கலைகள் அருகாத திங்கள், வெம்
கானில் உறையாத சீயம்;
கருதரிய இக்குணம் அனைத்தும் உண்டான பேர்
காசினியில் அருமை ஆகும்!
தெரிய உரை செய்யின் மொழி, கீர்த்தி, வரு கல்வியொடு,
சீர் இதயம், ஈகை, வதனம்,
திடமான வீரம், இவை என்று அறிகுவார்கள்! இச்
செகமெலாம் கொண்டாடவே
அருள் கற்பதரு என்ன ஓங்கிடும் தான துரை
ஆகும் எமது அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|
|
|
உரை
|
|
|
|
|
98.
திருமால் அவதாரம்
சோமுக அசுரனை
முன் வதைத்து அமரர் துயர் கெடச்
சுருதி தந்தது மச்சம் ஆம்;
சுரர் தமக்கு அமுது ஈந்தது ஆமையாம்; பாய் போல்
சுருட்டி மாநிலம் எடுத்தே
போம் இரணியாக்கு அதனை உயிருண்டது ஏனம் ஆம்;
பொல்லாத கனகன் உயிரைப்
போக்கியது நரசிங்கம்; உலகு அளந்து ஓங்கியது
புனித வாமன மூர்த்தி ஆம்;
ஏம் உறும் இராவணனை வென்றவன் இராகவன்;
இரவி குலம் வேர் அறுத்தோன்
ஏர் பரசு இராமன்; வரு கண்ணனொடு பலராமன்
இப் புவி பயம் தவிர்த்தோர்
ஆம் இனிய கல்கி இனி மேல் வருவது இவை பத்தும்
அரி வடிவம்; அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|
|
|
உரை
|
|
|
|
|
99. சிவமூர்த்தி
பிறைசூடி, உமை
நேசன், விடை ஊர்தி, நடம் இடும்
பெரியன், உயர் வதுவை வடிவன்
பிச்சாடனன், காமதகனன், மறலியை வென்ற
பெம்மான், புரந்தகித்தோன்,
மறமலி சலந்தரனை மாய்த்தவன், பிரமன் முடி
வௌவினோன், வீரேசுரன்,
மருவு நரசிங்கத்தை வென்ற அரன், உமை பாகன்
வனசரன், கங்காளனே,
விறல் மேவு சண்டேச ரட்சகன், கடுமாந்தி
மிக்க சக்கரம் உதவினோன்,
விநாயகனுக்கு அருள் செய்தோன் குகன் உமையுடன் கூடி
மிளிர் ஏக பாதன், சுகன்,
அறிவரிய தட்சிணா மூர்த்தியொடு இலிங்கம் ஆம்
ஐயனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|
|
|
உரை
|
|
|
|
|
100.
கவி வணக்கம்
மலர் இதழி
பைங்குவளை மென்முல்லை மல்லிகை
மருக்கொழுந்து உயர் கூவிளம்
மற்றும் உள வாச மலர் பத்திரம் சிலர் சூட
மணி முடி தனில் பொறுத்தே
சிலர் எருக்கொடு வனத்துள் பூளை பச்சறுகு
செம்முள்ளி மலர் சூடவே
சித்தம் வைத்து அவையும் அங்கீகரித்திடும் மகா
தேவ தேவா! தெரிந்தே
கலை வலார் உரைக்கு நன் கவியொடம் பலவாண
கவிராயன் ஆகுமென் புன்
கவியையும் சூடியே மனமகிழ்ந்திடுவது உன்
கடன் ஆகும் அடல் நாகமும்
அலை பெருகு கங்கையும் செழு மதியமும் புனையும்
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|
|
|
உரை
|
|
|
|