1. முருகன் திருவிளையாடல்

பூமிக்குஓர் ஆறுதலையாய்வந்து சரவணப்
     பொய்கைதனில் விளையாடியும்,
  புனிதற்கு மந்த்ரஉபதேசமொழி சொல்லியும்
     போதனைச் சிறையில் வைத்தும்,
தேமிக்க அரிஅரப் பிரமாதி கட்கும்
     செகுக்கமுடியாஅசுரனைத்
  தேகம் கிழித்து வடிவேலினால் இருகூறு
     செய்துஅமரர் சிறைதவிர்த்தும்,
நேமிக்குள் அன்பர்இடர் உற்ற சமயந்தனில்
     நினைக்குமுன் வந்து உதவியும்,
  நிதமும் மெய்த் துணையாய் விளங்கலால் உலகில்உனை
     நிகரான தெய்வம் உண்டோ
மாமிக்க தேன்பருகு பூங்கடம்பு அணியும்மணி
     மார்பனே ! வள்ளிகணவா !
  மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

உரை