12. விரைந்து அடக்கத் தருவன இவை,

அக்கினியை, வாய்முந்து துர்ச்சனரை, வஞ்சமனை
     யாளை வளர்பயிர்கொள் களையை,
  அஞ்சா விரோதிகளை, அநியாயம் உடையோரை,
     அகிர்த்தியப் பெண்கள் ஆர்ப்பைக்,
கைக்குஇனிய தொழிலாளியைக்,கொண்ட அடிமையைக்
     களவுசெய்யும் திருடரைக்,
  கருதிய விசாரத்தை, அடக்கம்இல் பலிசையைக்,
     கடிதான கோபந்தனை,
மெய்க்குஇனிது அலாப்பிணியை, அவைஉதாசீனத்தை,
     வினைமூண்டிடும் சண்டையை,
  விடம்ஏறு கோரத்தை அன்றுஅடக்குவது அலால்
     மிஞ்சவிடல் ஆகாதுகாண்
மைக்குஇனிய கண்ணி குறவள்ளி தெய்வானையை
     மணம்செய்த பேர்அழகனே
  மயில்ஏறி விளையாடு குகனே புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

உரை