14. இதனை விளக்குவது இது எனல்

குறையாத காயத்ரி ஆதி செபமகிமையும்,
     கூறு சுருதிப்பெருமையும்,
  கோதிலா ஆகம புராணத்தின் வளமையும்,
     குலவுயாக ஆதிபலவும்,
முறையாய் நடத்தலால் சகல தீவினைகளையும்
     முளரிபோலே தகிப்பார்
  முதன்மைபெறு சிலைசெம்பு பிரிதிவிகளில்தெய்வ
     மூர்த்தம் உண்டாக்குவிப்பார்
நிறையாக நீதிநெறி வழுவார்கள் ஆகையால்,
     நீள்மழை பொழிந்திடுவதும்,
  நிலமது செழிப்பதும், அரசர் செங்கோல்புரியும்
     நிலையும், மாதவர் செய்தவமும்,
மறையோர்களாலே விளங்கும் இவ்உலகத்தின்
     மானிடத் தெய்வம்இவர் காண்
  மயில்ஏறி விளையாடு குகனே!புல்வயல் நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை