27. பயன் இல்லாதவை

கடல்நீர் மிகுந்துஎன்ன ஒதிதான் பருத்துஎன்ன
     காட்டுஇலவு மலரில்என்ன
  கருவேல் பழுத்துஎன்ன நாய்ப்பால் சுரந்துஎன்ன
     கானில்மழை பெய்தும்என்ன
அடர்கழுதை லத்திநிலம் எல்லாம் குவிந்து என்ன
     அரியகுணம் இல்லாதபெண்
  அழகாய் இருந்துஎன்ன ஆஸ்தான கோழைபல
     அரியநூல் ஓதிஎன்ன
திடம்இனிய பூதம்வெகு பொன்காத்து இருந்துஎன்ன
     திறல்மிகும் கரடிமயிர்தான்
  செறிவாகி நீண்டுஎன்ன வஸ்த்ரபூடணம் எலாம்
     சித்திரத்து உற்றும் என்ன
மடம்மிகுந்து எவருக்கும் உபகாரம் இல்லாத
     வம்பர்வாழ்வுக்கு நிகராம்
  மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

உரை