3. அரசர் இயல்பு

குடிபடையில் அபிமானம், மந்திர ஆலோசனை,
     குறிப்பு அறிதல், சத்யவசனம்,
  கொடைநித்தம் அவர்அவர்க்கு ஏற்றமரியாதை பொறை,
     கோடாத சதுர்உபாயம்
படிவிசாரணையொடு ப்ரதானி தளகர்த்தரைப்
     பண்புஅறிந்தே அமைத்தல்,
  பல்லுயிர் எலாம் தன்உயிர்க்கு நிகர் என்றே
     பரித்தல், குற்றங்கள் களைதல்,
துடிபெறு தனக்கு உறுதியான நட்பகம் இன்மை,
     சுகுணமொடு, கல்வி அறிவு,
  தோலாத காலம்இடம் அறிதல், வினை வலிகண்டு
     துட்ட நிக்ரக சௌரியம்,
வடிவுபெறு செங்கோல் நடத்திவரும் அரசர்க்கு
     வழுவாத முறைமை இதுகாண்
  மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை