31. இறந்தும் இறவாதவர்
அனைவர்க்கும் உபகாரம்ஆம்
வாவி கூவம்உண்
டாக்கினோர், நீதிமன்னர்
அழியாத தேவாலயங்கட்டி வைத்துளோர்
அகரங்கள் செய்தபெரியோர்
தனை ஒப்புஇலாப் புதல்வனைப்பெற்ற பேர்பொருது
சமர்வென்ற சுத்தவீரர்
தரணிதனில் நிலைநிற்க எந்நாளும் மாறாத
தருமங்கள் செய்தபேர்கள்
கனவித்தை கொண்டவர்கள் ஓயாத கொடையாளர்
காவியம் செய்தகவிஞர்
கற்பினில் மிகுந்தஒரு பத்தினி மடந்தையைக்
கடிமணம் செய்தோர்கள்,இம்
மனிதர்கள் சரீரங்கள் போகினும் சாகாத
மனிதர்இவர் ஆகும்அன்றோ!
மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|