32. சாகாது இருந்தும் இறந்தோர்

மாறாத வறுமையோர், தீராத பிணியாளர்
     வருவேட்டகத்தில் உண்போர்
  மனைவியை வழங்கியே சீவனம் செய்குவோர்
     மன்னும் ஒருராசசபையில்
தூறாக நிந்தைசெய்து உய்குவோர் சிவிகைகள்
     சுமந்தே பிழைக்கின்றபேர்
  தொலையா விசாரத்து அழுந்துவோர் வார்த்தையில்
     சோர்வுபடல் உற்றபெரியோர்
வீறாக மனையாள் தனக்குஅஞ்சி வந்திடு
     விருந்தினை ஒழித்துவிடுவோர்
  வீம்புடன் செல்லாத விவகாரம் அதுகொண்டு
     மிக்கசபை ஏறும்அசடர்
மாறாக இவர்எலாம் உயிருடன் செத்தசவம்
     ஆகிஒளி மாய்வர்கண்டாய்
  மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

உரை