34. ஈயாதவர் இயல்பு

திரவியம் காக்கும்ஒரு பூதங்கள் போல்பணம்
     தேடிப் புதைத்துவைப்பார்
  சீலைநலமாகவும் கட்டார்கள் நல்அமுது
     செய்துஉணார் அறமும்செயார்
புரவலர்செய் தண்டம் தனக்கும்வலுவாகப்
     புகும்திருடருக்கும் ஈவார்
  புலவரைக் கண்டவுடன் ஓடிப் பதுங்குவார்
     புராணிகர்க்கு ஒன்றும்உதவார்
விரகு அறிந் தேபிள்ளை சோறுகறி தினுஅளவில்
     வெகுபணம் செலவுஆகலால்
  விளையாடு கிழவனாம் பிள்ளையே பிள்ளைஎன
     மிகுசெட்டி சொன்னகதைபோல்
வரவுபார்க்கின்றதே அல்லாது லோபியர்கள்
     மற்றொருவருக்கு ஈவரோ?
  மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

உரை