35. திருமகள்
வாழும் இடங்கள்
கடவாரணத்திலும் கங்கா
சலத்திலும்
கமல ஆசனம்தன்னிலும்
காகுத்தன் மார்பிலும் கொற்றவர் இடத்திலும்
காலியின் கூட்டத்திலும்
நடமாடு பரியிலும் பொய்வார்த்தை சொல்லாத
நல்லோர் இடம்தன்னிலும்
நல்லசுப லட்சணம் மிகுந்தமனை தன்னிலும்
ரணசுத்த வீரர்பாலும்
அடர்கேதனத்திலும் சயம்வரந் தன்னிலும்
அருந்துளசி வில்வத்திலும்
அலர்தரு கடப்பமலர் தனிலும் இரதத்திலும்
அதிககுணமான ரூப
மடவார் இடத்திலும் குடிகொண்டு திருமாது
மாறாது இருப்பள் அன்றோ?
மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|