39. குணம்
மாறாமை
குணம்ஏலாத் துட்டமிருகங்களையும்,
நயகுணம்
கொண்டுஉட்படுத்தி விடலாம்
கொடியபல விடநோய்கள் யாவும்ஒளடதம்அது
கொடுத்துத் திருப்பிவிடலாம்
உணர்விலாப் பிரமராட்சசுமுதல் பேய்களை
உகந்துகூத்து ஆட்டிவிடலாம்
உபாயத்தினால்பெரும் பறவைக்கு நற்புத்தி
உண்டாக்கலாம்,உயிர்பெறப்
பிணம்அதை எழுப்பலாம் அக்கினி சுடாமல்
பெரும்புனல் எனச்செய்யலாம்
பிணியையும் அகற்றலாம் காலதூதுவரையும்
பின்புவருக என்றுசொலலாம்
மணலையும் கயிறாத் திரிக்கலாம் கயவர்குணம்
மட்டும் திருப்பவசமோ?
மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|