4. வணிகர் இயல்பு

கொண்டபடி போலும்விலை பேசி,லாபம்சிறிது
     கூடிவர நயம்உரைப்பார்;
  கொள்ளும் ஒரு முதலுக்கு மோசம் வராதபடி
     குறுகவே செலவுசெய்வார்;
வண்டப் புரட்டர் தாம் முறிதந்து, பொன் அடகு
     வைக்கினும் கடன் ஈந்திடார்;
  மருவும் நாணயம் உளோர் கேட்டுஅனுப்புகினும் அவர்
     வார்த்தையில் எலாம்கொடுப்பார்;
கண்டுஎழுது பற்றுவரவினில் மயிர் பிளந்தே
     கணக்கில் அணுவாகிலும் விடார்;
  காசு வீணில் செலவிடார் உசிதமானதில்
     கனதிரவியங்கள் விடுவார்;
மண்டலத்து ஊடுகன வர்த்தகம் செய்கின்ற
     வணிகர்க்கு முறைமை இதுகாண்
  மயில்ஏறி விளையாடு குகனே! புல்வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை