4. வணிகர்
இயல்பு
கொண்டபடி போலும்விலை
பேசி,லாபம்சிறிது
கூடிவர நயம்உரைப்பார்;
கொள்ளும் ஒரு முதலுக்கு மோசம் வராதபடி
குறுகவே செலவுசெய்வார்;
வண்டப் புரட்டர் தாம் முறிதந்து, பொன் அடகு
வைக்கினும் கடன் ஈந்திடார்;
மருவும் நாணயம் உளோர் கேட்டுஅனுப்புகினும் அவர்
வார்த்தையில் எலாம்கொடுப்பார்;
கண்டுஎழுது பற்றுவரவினில் மயிர் பிளந்தே
கணக்கில் அணுவாகிலும் விடார்;
காசு வீணில் செலவிடார் உசிதமானதில்
கனதிரவியங்கள் விடுவார்;
மண்டலத்து ஊடுகன வர்த்தகம் செய்கின்ற
வணிகர்க்கு முறைமை இதுகாண்
மயில்ஏறி விளையாடு குகனே! புல்வயல்நீடு
மலைமேவு குமரேசனே!
|