40. மக்களில் விலங்குகள்

தான் பிடித்தது பிடிப்பு என்று மேலவர்புத்தி
     தள்ளிச்செய்வோர் குரங்கு
  சபையில் குறிப்புஅறிய மாட்டாமல் நின்றவர்
     தாம்பயன் இலாதமரமாம்
வீம்பினால் எளியவரை எதிர்பண்ணி நிற்கும்ஒரு
     வெறியர் குரைஞமலிஆவர்
  மிகநாடி வருவோர் முகம்பார்த்திடா,லோபர்
     மேன்மைஇல்லாத கழுதை
சோம்பலொடு பெரியோர் சபைக்குள் படுத்திடும்
     தூங்கலே சண்டிக்கடா
  சூதுடன் அடுத்தோர்க்கு இடுக்கணே செய்திடும்
     துட்டனே கொட்டுதேளாம்
மாம்பழந்தனைவேண்டி அந்நாளில் ஈசனை
     வலமாக வந்தமுருகா
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

உரை