42. இன்ன தீங்குஉள்ளோர் இன்ன கிரகம் போல்வர்

அன்னை தந்தையர் புத்தி கேளாத பிள்ளையோ
     அட்டமச்சனி ஆகுவான்
  அஞ்சாமல் எதிர்பேசி நிற்குமனையாள் வாக்கில்
     அங்காரகச் சன்மமாம்
தன்னைமிஞ்சிச்சொன்ன வார்த்தை கேளாஅடிமை
     சந்திராட்டகம் என்னலாம்
  தன்பங்கு தாவென்று சபைஏறு தம்பியோ
     சார்ந்தசன்மச் சூரியன்
நன்நயம் இலாதவஞ்சனைசெய்த தமையன்மூன்
     றாம்இடத் தேவியாம்
  நாடொறும் விரோதம்இடு கொண்டோன் கொடுத்துளோன்
     ராகுகேதுக்கள் எனலாம்
மன்அயனை அன்றுசிறை தனில்இட்டு நம்பற்கு
     மந்திரம் உரைத்தகுருவே
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

உரை