43. நல்லிஞ் சேர்தல்

சந்தன விருட்சத்தை அண்டிநிற்கின்றபல
     தருவும்அவ்வாசனை தரும்
  தங்கமக மேருவை அடுத்திடும் காக்கையும்
     சாயல்பொன் மயமேதரும்
பந்தம்மிகு பாலுடன்வளாவிய தணீரெலாம்
     பால்போல் நிறங்கொடுக்கும்
  படிகமணிகட்குளே நிற்கின்ற வடமுமப்
     படியே குணங்கொடுக்கும்
அந்தமிகு மரகதக் கல்லைத் தரித்திடில்
     அடுத்ததும் பசுமையாகும்
  ஆனபெரியோர்களொடு சகவாசம் அதுசெயின்
     அவர்கள்குணம் வருமென்பர்காண்
மந்தர நெடுங்கிரியின் முன்கடல் கடைந்தஅரி
     மருகமெய்ஞ் ஞானமுருகா
  மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

உரை